முள்ளிவாய்க்கால் நினைவேந்திய மாணவர்களைத் தாக்கும்படி தமிழ் இராஜாங்க அமைச்சர் உத்தரவு...!
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்துகொண்டிருந்தபோது, பொலிஸார் அங்குவந்து அடாவடிசெய்திருந்த விடயம் யாவரும் அறிந்ததே.
ஏற்றப்பட்ட தீபங்களை காலால் மிதித்து, துண்டுபிரசுரங்களைக் கிழித்தெறிந்து, மாணவர்களை மிரட்டி பல காரியங்களை பொலிஸார் அங்கு அரங்கேற்றியிருந்தார்கள்.
இலங்கையின் பல பாகங்களில் நடைபெறுகின்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் பொலிஸாரால் குழப்பப்படாத நிலையில், மட்டக்களப்பில் மாத்திரம் எதற்காகக் குழப்புகின்றீர்கள் என்று மாணவர்கள் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.
பல்கலைக்கழக நிகழ்வுகளைக் குழப்பும்படி உங்கள் இராஜாங்க அமைச்சர் ஒருவர் எங்களுக்கு கடுமையான அழுத்தம் வழங்குகின்றார் என்று இரகசியமாகக் கூறினாராம் ஒரு தமிழ் பொலிஸார்.
மட்டக்களப்பு மக்கள் தனது கட்டுப்பாட்டுக்குள், பிரதேசவாதச் சிந்தனையுடன் தான் இருக்கின்றார்கள் என்பதை எஜமானர்களுக்கு நிரூபிப்பதற்குத்தானாம் இந்த நடவடிக்கை என்று தமக்குள் பேசிக்கொள்கின்றார்கள் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
