ஈரானிய மக்களுக்கு மொஜ்தபா கமெனி விடுத்துள்ள அழைப்பு
எந்தத் தூண்டுதலும் இன்றி நடந்த அமெரிக்க - சியோனிச ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட அழிவுகளைச் சரிசெய்யவும், உள்கட்டமைப்பை மீட்டெடுக்கவும் நாடு தழுவிய விரிவான இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளதாக ஈரான் அரசு ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியக் குடியரசு தினம் மற்றும் தேசிய இயற்கை தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஒரு விரிவான செய்தியின் ஒரு பகுதியாகத் தலைவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் கொடூர தாக்குதல்
சமீபத்திய மோதலைத் தொடர்ந்து, நாட்டின் தொடர்ச்சியான செழிப்பை உறுதி செய்வதில் தேசிய முயற்சிகள் இப்போது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகனான உச்ச தலைவர், சமீபத்திய வெளிநாட்டு மோதல்கள் மக்களைப் பாதித்தது மட்டுமல்லாமல், குறிப்பாக "அதன் நிலத்தையும் இயற்கைச் சூழலையும் குறிவைத்துள்ளன" என்று குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளைக் கண்டித்த அவர், "இழிவான மற்றும் இரக்கமற்ற அமெரிக்க மற்றும் சியோனிச எதிரி தனது கொடூரத்தில் மனித, தார்மீக அல்லது இருப்பு சார்ந்த வரம்புகளை அறியாத" ஒரு நேரத்தில், தேசம் உள்நாட்டு வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
பெப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதல்களின் போது உயிரிழந்தவர்களுக்கு அந்த உரையின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதி அர்ப்பணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறி்த்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளம் குழந்தைகளைக் குறிப்பிட்டு, "குழந்தைகளைக் கொல்லும் அரக்கத்தனமான அமெரிக்க மற்றும் சியோனிசப் பிசாசுகள், பாடசாலையின் இளம் நாற்றுகளைக் கொடூரமாகப் பலியிட்டன" என்று அவர் கூறினார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam