இலங்கையில் மக்கள் தொகையை விட அதிகரிக்கும் தொலைபேசிகள்
நாட்டின் மக்கள் தொகையை விட மக்களால் பாவிக்கப்படும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் வரையான இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் (SLC) அறிக்கையின் படி இரண்டு கோடியே பதினேழு இலட்சத்து அறுபத்தி மூன்று ஆயிரமாகும்.
தொலைபேசி அழைப்புக்கள்..
அத்தோடு கடந்த 2024 ஆம் ஆண்டில் இந்நாட்டு மக்கள் 560 கோடி அழைப்பு நிமிடங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
கையடக்க தொலைபேசிகள் பரவத் தொடங்கிய 2009 ஆம் ஆண்டில், அப்போது நாட்டில் தொலைபேசிகளின் எண்ணிக்கை 91,359 ஆக இருந்துள்ளது.
இதற்கிடையில், தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தரவுகளின்படி, நாட்டில் ஒரு வலுவான தொலைத்தொடர்பு வலையமைப்பு காணப்படுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் 2023 ஆம் ஆண்டில் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்ட வருவாய் 48,236 மில்லியன் ஆகும். இதில், 44,555 மில்லியன் தொலைத்தொடர்புக்கான ஒருங்கிணைந்த நிதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 11 மணி நேரம் முன்

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
