வெளிநாடொன்றில் பனிச்சரிவில் சிக்கி 9 பேர் மாயம்
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள லேக் டாஹோ பகுதியில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி ஒன்பது பேர் மாயமாகியுள்ளனர்.
ட்ரக்கி நகருக்கு அருகிலுள்ள காஸில் பீக் பகுதியில் நேற்று(17.2.2026)காலை இந்த விபத்து நிகழ்ந்தது.
மொத்தம் 15 பேரைக் கொண்ட குழுவொன்று அங்கு பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பனிச்சரிவு ஏற்பட்டது.
மீட்புப் பணி
இதில் சிக்கியவர்களில் ஆறு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்; மீட்கப்பட்டவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மாயமாகியுள்ள ஒன்பது பேரைத் தேடும் பணியில் 46க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இருப்பினும், அப்பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் குறைந்த அளவிலான பார்வைத்திறன் காரணமாக மீட்புப் பணியில் பெரும் சவால்கள் நிலவுகின்றன.
பனிச்சரிவு
பனிச்சரிவு ஏற்படும் அபாயம் 5க்கு 4 என்ற 'உயர்' நிலையில் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளதால், மீட்புப் படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இவ்வளவு மோசமான வானிலையிலும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகத் தெரியவில்லை என உள்ளூர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
என்னது, இவருக்கு இரண்டாம் திருமணமா.. பிரச்சனையில் சிக்கிக்கொண்ட சோழன்! அய்யனார் துணை சீரியல் புரோமோ Cineulagam
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam