எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS)

United Human Rights Missing Persons Sri Lanka
By Shan Aug 31, 2022 07:15 PM GMT
Report

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் நேற்று  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் வவுனியாவில் 2018வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்னால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தினை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

”இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் என்பதுடன் எமது போராட்டத்தின் 2018வது நாளாகவும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

எங்கள் கருப்பொருள் “தமிழர்களுக்கு ஐசிசி தேவை”, “இலங்கை கங்காரு நீதிமன்றம் அல்ல”, “தமிழர்கள் பொதுவாக்கெடுப்பையே விரும்புகிறார்கள்”,“13வது திருத்தத்தை அல்ல” காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் கண்டுபிடிக்கப்படும் வரை இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இறையாண்மையுள்ள தமிழர் தாயகம்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இந்தப் போராட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையின் சிங்கள ஆட்சியால் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தில் தமிழர்களைப் பாதுகாக்கும் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

இலங்கை நீண்டகாலமாக ஒரு அடக்குமுறை தேசமாக இருந்து வருவதுடன், அதன் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு மற்றும் செயலிழந்த பொருளாதாரம், கடந்த பல மாதங்களாக உலகிற்கு வேதனையுடன் தெளிவுபடுத்தப்பட்ட விடயம், மேலும் தோல்வியடைந்த நாடாக உள்ளது.

பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

தீவில் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் சுதந்திர இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தை விரும்புகிறார்கள். ஐ.நாவின் கண்காணிப்பு வாக்கெடுப்பு மூலம் இதைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி. காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் சில பிள்ளைகள் பலவந்தமாக பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாகவும், சிலர் பாலியல் அடிமைகளாகவும் விற்கப்பட்டதை நாம் அறிவோம்.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக், இலங்கை அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பான கடத்தல்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.

தமிழர்களுக்கு பொருளாதாரம் கூட இல்லை, அது இலங்கை இராணுவத்தால் திருடப்பட்டது.

பௌத்த மயப்படுத்தல்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இலங்கை இராணுவமும், இலங்கை பௌத்த தொல்பொருள் திணைக்களமும் இந்துக்களின் புனிதத் தலங்களை ஆக்கிரமித்து, கோவில்களை இழிவுபடுத்தி அழித்து, அவற்றின் இடத்தில் தங்களுடைய பௌத்த மதச் சின்னங்களை வைத்துள்ளனர்.

பௌத்த விகாரைகளை கட்டிய பின்னர், அந்த சமூகங்களுக்குள் சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்து தமிழர்களை அவர்களது சொந்த கிராமங்களை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துகின்றனர்.

போரில் உயிரிழந்த தமிழ் மக்கள்

 எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 2009 இல் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பின்னர் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியது.

ஆனால் மன்னார் பேராயர் அருட்தந்தை ஜோசப் ராஜப்பு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், 145,000 தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பது மிகவும் துல்லியமானது என்று தெரிவித்தார்.

போரின் முடிவில் 90,000 விதவைகள் மற்றும் 50,000 ஆதரவற்றோர் இருந்தனர் என்றும் கூறியிருந்தார்.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் 

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

“இலங்கை கங்காரு நீதிமன்றங்களால் அல்ல”, “ஐசிசியால் கண்காணிக்கப்படும் சர்வதேச நீதி எங்களுக்குத் தேவை”. “13வது திருத்தச் சட்டத்திலோ அல்லது இலங்கை அரசியல் சாசனத்தின் போலித்தனத்திலோ எங்களுக்கு அக்கறை இல்லை”, “தமிழ் மக்களின் விருப்பத்தையும் எதிர்காலப் பாதையையும் சரியான முறையில் வெளிப்படுத்தும் வகையில் நேரடி ஜனநாயகத்தை ஆதரிக்கும் வாக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம்”.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டிற்கு நாங்கள் இப்போது கூறிய விடயங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்புகிறோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இந்த விசேட தினத்தில், எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம்.

ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவியுடன் தமிழ் இறைமைக்காக போராடி, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டறிவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கொடிகளை ஏந்தியிருந்ததுடன் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது படங்களையும் தாங்கியிருந்தனர்.

திருக்கோவில்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினையிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்னாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தீச்சட்டி ஏந்தி சத்தியப் பிரமாணம் செய்து நேற்று இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்ட சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்னால் காலை 10 மணிக்கு காணாமல் போன நூற்றுக்கு மேற்பட்டவர்களின் உறவுகள் ஒன்று திரண்டு “சர்வதேசமே எமது நீதியை பெற்று தரவும்”,“எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?”,“இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு வெளியே”போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக திருக்கோவில் மணிக் கூட்டு கோபுரத்தை சென்றடைந்தனர்.   

செய்தி:பவன்

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US