எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS)

United Human Rights Missing Persons Sri Lanka
By Shan Aug 31, 2022 07:15 PM GMT
Report

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் நேற்று  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் வவுனியாவில் 2018வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்னால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தினை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

”இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் என்பதுடன் எமது போராட்டத்தின் 2018வது நாளாகவும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

எங்கள் கருப்பொருள் “தமிழர்களுக்கு ஐசிசி தேவை”, “இலங்கை கங்காரு நீதிமன்றம் அல்ல”, “தமிழர்கள் பொதுவாக்கெடுப்பையே விரும்புகிறார்கள்”,“13வது திருத்தத்தை அல்ல” காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் கண்டுபிடிக்கப்படும் வரை இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இறையாண்மையுள்ள தமிழர் தாயகம்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இந்தப் போராட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையின் சிங்கள ஆட்சியால் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தில் தமிழர்களைப் பாதுகாக்கும் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

இலங்கை நீண்டகாலமாக ஒரு அடக்குமுறை தேசமாக இருந்து வருவதுடன், அதன் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு மற்றும் செயலிழந்த பொருளாதாரம், கடந்த பல மாதங்களாக உலகிற்கு வேதனையுடன் தெளிவுபடுத்தப்பட்ட விடயம், மேலும் தோல்வியடைந்த நாடாக உள்ளது.

பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

தீவில் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் சுதந்திர இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தை விரும்புகிறார்கள். ஐ.நாவின் கண்காணிப்பு வாக்கெடுப்பு மூலம் இதைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி. காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் சில பிள்ளைகள் பலவந்தமாக பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாகவும், சிலர் பாலியல் அடிமைகளாகவும் விற்கப்பட்டதை நாம் அறிவோம்.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக், இலங்கை அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பான கடத்தல்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.

தமிழர்களுக்கு பொருளாதாரம் கூட இல்லை, அது இலங்கை இராணுவத்தால் திருடப்பட்டது.

பௌத்த மயப்படுத்தல்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இலங்கை இராணுவமும், இலங்கை பௌத்த தொல்பொருள் திணைக்களமும் இந்துக்களின் புனிதத் தலங்களை ஆக்கிரமித்து, கோவில்களை இழிவுபடுத்தி அழித்து, அவற்றின் இடத்தில் தங்களுடைய பௌத்த மதச் சின்னங்களை வைத்துள்ளனர்.

பௌத்த விகாரைகளை கட்டிய பின்னர், அந்த சமூகங்களுக்குள் சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்து தமிழர்களை அவர்களது சொந்த கிராமங்களை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துகின்றனர்.

போரில் உயிரிழந்த தமிழ் மக்கள்

 எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 2009 இல் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பின்னர் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியது.

ஆனால் மன்னார் பேராயர் அருட்தந்தை ஜோசப் ராஜப்பு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், 145,000 தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பது மிகவும் துல்லியமானது என்று தெரிவித்தார்.

போரின் முடிவில் 90,000 விதவைகள் மற்றும் 50,000 ஆதரவற்றோர் இருந்தனர் என்றும் கூறியிருந்தார்.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் 

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

“இலங்கை கங்காரு நீதிமன்றங்களால் அல்ல”, “ஐசிசியால் கண்காணிக்கப்படும் சர்வதேச நீதி எங்களுக்குத் தேவை”. “13வது திருத்தச் சட்டத்திலோ அல்லது இலங்கை அரசியல் சாசனத்தின் போலித்தனத்திலோ எங்களுக்கு அக்கறை இல்லை”, “தமிழ் மக்களின் விருப்பத்தையும் எதிர்காலப் பாதையையும் சரியான முறையில் வெளிப்படுத்தும் வகையில் நேரடி ஜனநாயகத்தை ஆதரிக்கும் வாக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம்”.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டிற்கு நாங்கள் இப்போது கூறிய விடயங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்புகிறோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இந்த விசேட தினத்தில், எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம்.

ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவியுடன் தமிழ் இறைமைக்காக போராடி, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டறிவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கொடிகளை ஏந்தியிருந்ததுடன் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது படங்களையும் தாங்கியிருந்தனர்.

திருக்கோவில்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினையிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்னாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தீச்சட்டி ஏந்தி சத்தியப் பிரமாணம் செய்து நேற்று இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்ட சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்னால் காலை 10 மணிக்கு காணாமல் போன நூற்றுக்கு மேற்பட்டவர்களின் உறவுகள் ஒன்று திரண்டு “சர்வதேசமே எமது நீதியை பெற்று தரவும்”,“எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?”,“இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு வெளியே”போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக திருக்கோவில் மணிக் கூட்டு கோபுரத்தை சென்றடைந்தனர்.   

செய்தி:பவன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உருத்திரபுரம், புதுமுறிப்பு

26 Jul, 2024
நன்றி நவிலல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், முகத்தான்குளம், செட்டிக்குளம், Liverpool, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா

09 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வரக்காப்பொல, கிருலப்பனை, பரிஸ், France, Scarborough, Canada

26 Jun, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, கொழும்பு

12 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

14 Jul, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, London, United Kingdom

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US