எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS)

United Human Rights Missing Persons Sri Lanka
By Shan Aug 31, 2022 07:15 PM GMT
Report

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு தமிழர் பகுதிகளில் நேற்று  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. 

வவுனியா

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினால் வவுனியாவில் 2018வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகைக்கு முன்னால் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோரின் தினத்தினை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

”இன்று சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் என்பதுடன் எமது போராட்டத்தின் 2018வது நாளாகவும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

எங்கள் கருப்பொருள் “தமிழர்களுக்கு ஐசிசி தேவை”, “இலங்கை கங்காரு நீதிமன்றம் அல்ல”, “தமிழர்கள் பொதுவாக்கெடுப்பையே விரும்புகிறார்கள்”,“13வது திருத்தத்தை அல்ல” காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் பிள்ளைகள் கண்டுபிடிக்கப்படும் வரை இந்தப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடுவோம்.

இறையாண்மையுள்ள தமிழர் தாயகம்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இந்தப் போராட்டத்தில், எதிர்காலத்தில் இலங்கையின் சிங்கள ஆட்சியால் தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளில் இருந்து பாதுகாப்பான, இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தில் தமிழர்களைப் பாதுகாக்கும் அரசியல் தீர்வுக்கு நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

இலங்கை நீண்டகாலமாக ஒரு அடக்குமுறை தேசமாக இருந்து வருவதுடன், அதன் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு மற்றும் செயலிழந்த பொருளாதாரம், கடந்த பல மாதங்களாக உலகிற்கு வேதனையுடன் தெளிவுபடுத்தப்பட்ட விடயம், மேலும் தோல்வியடைந்த நாடாக உள்ளது.

பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

தீவில் உள்ள பெரும்பான்மையான தமிழர்கள் சுதந்திர இறையாண்மையுள்ள தமிழர் தாயகத்தை விரும்புகிறார்கள். ஐ.நாவின் கண்காணிப்பு வாக்கெடுப்பு மூலம் இதைக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி. காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் சில பிள்ளைகள் பலவந்தமாக பௌத்த மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் கடத்திச் செல்லப்பட்டு வெளிநாடுகளுக்கு தொழிலாளர்களாகவும், சிலர் பாலியல் அடிமைகளாகவும் விற்கப்பட்டதை நாம் அறிவோம்.

இலங்கைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் பிளேக், இலங்கை அரசாங்கம் சட்டத்திற்குப் புறம்பான கடத்தல்கள் மற்றும் கொலைகளில் ஈடுபட்டிருப்பதை உறுதிப்படுத்தினார்.

தமிழர்களுக்கு பொருளாதாரம் கூட இல்லை, அது இலங்கை இராணுவத்தால் திருடப்பட்டது.

பௌத்த மயப்படுத்தல்

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இலங்கை இராணுவமும், இலங்கை பௌத்த தொல்பொருள் திணைக்களமும் இந்துக்களின் புனிதத் தலங்களை ஆக்கிரமித்து, கோவில்களை இழிவுபடுத்தி அழித்து, அவற்றின் இடத்தில் தங்களுடைய பௌத்த மதச் சின்னங்களை வைத்துள்ளனர்.

பௌத்த விகாரைகளை கட்டிய பின்னர், அந்த சமூகங்களுக்குள் சிங்களக் குடியேற்றங்களைக் கொண்டு வந்து தமிழர்களை அவர்களது சொந்த கிராமங்களை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்துகின்றனர்.

போரில் உயிரிழந்த தமிழ் மக்கள்

 எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையின்படி 2009 இல் 20,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பின்னர் 70,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. கூறியது.

ஆனால் மன்னார் பேராயர் அருட்தந்தை ஜோசப் ராஜப்பு, இலங்கையின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம், 145,000 தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர் மற்றும் 25,000 தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர் என்பது மிகவும் துல்லியமானது என்று தெரிவித்தார்.

போரின் முடிவில் 90,000 விதவைகள் மற்றும் 50,000 ஆதரவற்றோர் இருந்தனர் என்றும் கூறியிருந்தார்.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் 

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

“இலங்கை கங்காரு நீதிமன்றங்களால் அல்ல”, “ஐசிசியால் கண்காணிக்கப்படும் சர்வதேச நீதி எங்களுக்குத் தேவை”. “13வது திருத்தச் சட்டத்திலோ அல்லது இலங்கை அரசியல் சாசனத்தின் போலித்தனத்திலோ எங்களுக்கு அக்கறை இல்லை”, “தமிழ் மக்களின் விருப்பத்தையும் எதிர்காலப் பாதையையும் சரியான முறையில் வெளிப்படுத்தும் வகையில் நேரடி ஜனநாயகத்தை ஆதரிக்கும் வாக்கெடுப்பை நாங்கள் விரும்புகிறோம்”.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டிற்கு நாங்கள் இப்போது கூறிய விடயங்கள் அடங்கிய கடிதத்தை அனுப்புகிறோம்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 

எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை:தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் (PHOTOS) | Missing Persons Sri Lanka

இந்த விசேட தினத்தில், எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதை உறுதியாக கூற விரும்புகிறோம்.

ஆனால், போரினால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவியுடன் தமிழ் இறைமைக்காக போராடி, காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை கண்டறிவதில் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதை குறிப்பிட விரும்புகின்றோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும்,போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், கொடிகளை ஏந்தியிருந்ததுடன் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது படங்களையும் தாங்கியிருந்தனர்.

திருக்கோவில்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினையிட்டு திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்னாள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தீச்சட்டி ஏந்தி சத்தியப் பிரமாணம் செய்து நேற்று இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் அக்கப்பட்ட சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் இவ் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தம்பிலுவில் பொதுச் சந்தைக்கு முன்னால் காலை 10 மணிக்கு காணாமல் போன நூற்றுக்கு மேற்பட்டவர்களின் உறவுகள் ஒன்று திரண்டு “சர்வதேசமே எமது நீதியை பெற்று தரவும்”,“எமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?”,“இராணுவமே தமிழர் நிலங்களை விட்டு வெளியே”போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு அங்கிருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலமாக திருக்கோவில் மணிக் கூட்டு கோபுரத்தை சென்றடைந்தனர்.   

செய்தி:பவன்

மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, London, United Kingdom

15 May, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US