யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சிசுவின் கருச்சிதைவு மீட்பு!
யாழ்ப்பாணம் நகர் மத்தியில் மீட்கப்பட்ட கரு தொடர்பில் கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு யாழ் . நீதவான் லெனின்குமார் பொலிஸாருக்கு பணித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார்.
கருவை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணிப்பு
அதன் பின்னர் அப்பகுதியில் சுமார் 6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது. அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கருவினை கடதாசி பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண் , எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற யாழ்.நீதவான் விசாரணைகளை முன்னெடுத்ததுடன்,கண்காணிப்பு கமராக்களின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் , கருவை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும் பணித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு



சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam