அவசர அவசரமாக மூடப்படும் வான்பரப்புக்கள்! நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து: வெளியான அறிவிப்பு
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
கட்டார், குவைட், ஈரான் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளுக்கான விமானப் பயணங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர், அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தமது விமான பயணங்களின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் போர் பதற்றத்தை தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டதால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் தாமதமாகலாம் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விமானங்களின் வழித்தடங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல்
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதலை அடுத்து கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் வான்வெளி மூடப்பட்டதால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் பல சர்வதேச விமானங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டுள்ளது.
அதன்படி, திட்டமிடப்பட்ட அட்டவணையுடன் ஒப்பிடும்போது விமானங்கள் தாமதமாகலாம் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.
பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்
இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் பிற வடக்கு பகுதிகளுக்கு பறக்கும் விமானங்கள் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னர் ஈரானிய மற்றும் இஸ்ரேலிய வான்வெளி வழியாக பறந்த விமானங்கள் இப்போது சவுதி அரேபிய வான்வெளி வழியாக திருப்பிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளன.

விமானங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டதாலும், விமான நேரங்கள் அதிகரித்ததாலும் தங்கள் இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று விமான நிறுவனம் பயணிகளுக்குத் தெரிவிக்கின்றது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் சிவில் விமானப் போக்குவரத்துக்கு தங்கள் வான்வெளியை முழுமையாக மூடியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரிட்டிஷ் ஏர்வேஸ் டெல் அவிவ், பஹ்ரைன் விமானங்களை இரத்து செய்துள்ளது.
விமானங்கள் இரத்து
இதேவேளை,டெல்லி-டெல் அவிவ் வழித்தடத்தில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் திருப்பி விடப்பட்டது.
துருக்கிய ஏர்லைன்ஸ் பல மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானங்களை இரத்து செய்துள்ளது லெபனான், சிரியா, ஈராக், ஈரான், ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கான விமானங்களை மார்ச் 2 வரை விமான நிறுவனம் இரத்து செய்துள்ளது.
கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய நாடுகளுக்கான திட்டமிடப்பட்ட விமானங்கள் சனிக்கிழமை இரத்து செய்யப்பட்டன.
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 23 மணி நேரம் முன்
சூடுபிடிக்கும் கள நிலவரம்: முக்கிய இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் - ஈரான் ஜனாதிபதி தொடர்பில் வெளியான தகவல்
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் ! ஈரானிலிருந்து உடனே வெளியேறுமாறு பல நாடுகள் அவசர அறிவிப்பு
ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து சரமாரியான தாக்குதல்! டிரம்பின் அதிரடி அறிவிப்பு - ஈரான் எடுக்கப்போகும் நடவடிக்கை
கட்டாரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வந்த சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நபர்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
குழந்தைக்காக சக்தி சொன்ன விஷயம், கதறி அழும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam