திடீரென தீப்பிடித்து எரிந்த இராஜாங்க அமைச்சரின் கார் - விபரீத சம்பவம்
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் (Samara Sampath Dasanayake) கார் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் பண்டாரவளை (Bandarawela) - ஹல்பே பகுதியில் இன்று (16.4.2024) அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
காயம் ஏற்படவில்லை
சாமர சம்பத் தசநாயக்க (Samara Sampath Dasanayake) மஹியங்கனையிலிருந்து எல்ல (Ella) பிரதேசத்திற்கு வந்து கொண்டிருந்த போதே பண்டாரவளை ஹல்பே பகுதியில் கார் திடீரென தீப்பிடித்துள்ளது.

எனினும், இந்த தீ விபத்தில் அமைச்சருக்கோ, சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரவளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் (fire department), எல்ல பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri