தரமான கல்வியை பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை உரிய அதிகாரிகளுக்கு உள்ளது: கடற்தொழில் அமைச்சர்
தரமான கல்வியையும் தரமான அதிபர் ஆசிரியர்களையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை உரிய அதிகாரிகளுக்கும் அதற்கு பொறுப்பான அமைச்சுக்கும் உள்ளது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையான புனித திரேசா பெண்கள் கல்லூரியின் அதிபர் கடந்த வாரம் ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் உரிய அதிபர் ஒருவரை இன்னும் நியமிக்கவில்லை.
முறைப்பாடுகள்
இந்தநிலையில், பெற்றோர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதிபர் தரம் 3இல் உள்ள அதிபர் ஒருவரை நியமித்துள்ளமை தொடர்பில் பாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வடக்கு மாகான ஆளுனர் மற்றும் மாகாண கல்வித்திணைக்களம் ஆகியவற்றுக்கு முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் கேள்வி எழுப்பிய போது தரமான கல்வியையும் அதிபர் ஆசிரியர்களையும் வழங்க வேண்டிய பெறுப்பு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் உரிய அமைச்சுக்கும் உள்ளது.
இவ்வாறான அதிபர்கள் நியமனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.