மயிலத்தமடு எங்கே இருக்கின்றது: கேள்வி எழுப்பிய நீதி அமைச்சர்
மட்டக்களப்பு, மயிலத்தமடுவில் சிங்களப் பேரினவாத அடக்குமுறைக்கு எதிராகப்
பண்ணையாளர்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், "மயிலத்தமடு
எங்கே இருக்கின்றது?" என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வியப்புடன் கேட்டுள்ளார் .
மயிலத்தமடுவில் இடம்பெறும் பேரினவாத அடக்குமுறை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விஜயதாஸ ராஜபக்சவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் மேற்கண்டவாறு வினவியுள்ளார்.
அதேவேளை, குருந்தூர்மலை தொடர்பான விடயங்களை அறிந்து வைத்துள்ளதாகவும் உண்மையில் சில அரசியல்வாதிகள்தான் இந்த விடயத்தை பதற்றமான நிலைக்குள் இட்டுச் செல்கின்றனர் என அமைச்சர் சுட்டிக்காட்டயுள்ளார்.
மேலும், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகச் செயற்பட்ட ரி.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றமைக்கு அரச அழுத்தங்கள் காரணமில்லை எனவும் தனது குடும்பத்திலுள்ள பிரச்சினையால்தான் அவர் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்றார் எனவும் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை விவகாரம்
அதேவேளை, இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும் அவருக்கு அச்சுறுத்தல் இருந்தது என்றால், அந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும் அவருக்கு அதிகாரம் இருந்தது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதையெல்லாம் விடுத்து அவர் அச்சுறுத்தலால்தான் நாட்டைவிட்டு வெளியேறினார் என்று தெரிவிப்பது பொருத்தம் இல்லை என்பதோடு அதில் உண்மையும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல் News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
