23 பேரிடம் இலட்சக்கணக்கில் பணமோசடி செய்த இலங்கை நபர் தப்பியோட்டம்! (video)

Sri Lanka Refugees Trincomalee Sri Lanka World Economic Crisis Refugee Camps
By Ashik Mar 14, 2023 07:07 AM GMT
Report

இலங்கையிலிருந்து வெளிநாட்டுப் பணிக்கு அனுப்புவதாகக் கூறி 23 பேரிடம் இலட்சக்கணக்கில் பணத்தைப் பெற்றுக் கொண்டு தமிழகத்துக்கு அகதியாகத் தப்பிச் சென்ற இலங்கை நபரிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவர் ராமநாதபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருகோணமலை - வெருகல் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் உட்பட 23 பேர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பிழைக்கலாம் எனத் தீர்மானித்துள்ளனர்.

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரிடம், தலா 6 இலட்சம் ரூபா வீதம் 23 பேர் பணத்தைக் கொடுத்து தங்களை எப்படியாவது ருமேனியா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.


23 பேரிடம் இலட்சக்கணக்கில் பணமோசடி செய்த இலங்கை நபர் தப்பியோட்டம்! (video) | Millions Of Money Laundered

மண்டபம் அகதிகள் முகாம்

இவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்ட ஜனார்த்தனன், குறித்த நபர்களை வெளிநாட்டுக்கு அனுப்பாமல், அங்கிருந்து பொதுமக்களிடம் பெற்ற பணத்துடன் சட்டவிரோதமாகத் தமிழகத்திற்கு அகதியாகப் படகு மூலம் தப்பித்து தனுஷ்கோடிக்குச் சென்று தற்போது மண்டபம் அகதிகள் முகாமில் அகதியாகத் தங்கியுள்ளார்.

இலங்கையில் இலட்சக்கணக்கில் மோசடி செய்துவிட்டு இங்கிருந்து தப்பி அகதியாக இந்தியாவுக்குச் சென்று, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கி இருக்கும் ஜனார்த்தனன் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தங்கள் பணத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் கூறி இலங்கையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் ஒருவரான ஜெயக்குமார் என்பவர் விமானம் மூலம் இலங்கையிலிருந்து தமிழகத்திற்குச் சென்று மண்டபம் பொலிஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

23 பேரிடம் இலட்சக்கணக்கில் பணமோசடி செய்த இலங்கை நபர் தப்பியோட்டம்! (video) | Millions Of Money Laundered

ஜெயக்குமார் அளித்த புகார் மீது பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் இன்று (13) ராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார்.

இலங்கையில் குற்றச் செயல்கள் புரிந்து விட்டு அகதிகள் போர்வையில் தமிழகத்துக்குத் தப்பி வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதால் பொலிஸார் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US