மில்லியன் கணக்கான பண மோசடி! நாட்டை விட்டு வெளியேற தயாராகும் பெண் தொழிலதிபர்
திலினி பிரியமாலியின் பாரிய பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள கிரிஷ் குழுமத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கான ஏற்பாடுகள் பல தடவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொழில் நிமித்தம் இந்தியா செல்ல விரும்புவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்சேபனை காரணமாக பிணை கோரிக்கையை நிராகரிக்க கோட்டை நீதவான் திலின கம தீர்மானித்தார்.
இதேவேளை, இந்த வழக்கில் சந்தேகநபராக உள்ள கிரிஷ் குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன விசாரணைக்கு சரியான முறையில் ஆதரவளிக்கவில்லை என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஆதரவளிக்குமாறு சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவை எச்சரித்த நீதவான், விசாரணைகளுக்கு இடையூறாக ஏதேனும் உண்மைகள் கண்டறியப்பட்டால், அவர் மீதான பிணை இரத்துச் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகரான ஜானகி சிறிவர்தன, கடந்த நவம்பர் 04ஆம் திகதி கொழும்பு, கோட்டை, கிறிஸ் சதுக்கத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri
