இராணுவ பாதுகாப்பை ஏற்க மறுத்த மனோ கணேசன்
நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுகிறதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் தனது முகநூல் பதிவொன்றின் ஊடாகவே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
“திம்பிரிகஸ்யாய இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் "எனது பாதுகாப்புக்காக" என்று கூறி, எனது ஸ்ரீமகாவிஹார வீதி வீட்டுக்கு வந்தார்கள்.
வழமையான மந்திரி பாதுகாப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் மேலதிகமாக மூவர் வந்தார்கள். இருதரப்பையும் "நன்றி தம்பிகளா, வேண்டாம்" என திருப்பி அனுப்பி விட்டேன்.
2005-2009, கொழும்பில் வெள்ளை வான் கடத்தல், படுகொலை நெருக்கடி காலத்தியிலேயே என் இதே வீட்டில் இப்படியே தான் இருந்தேன். இனியென்ன, இப்படியே இருக்கும்வரை இருப்போம்.” என அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri