கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக 110 புலம்பெயர் பணியாளர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று (05.10.2022) மாலை தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த குழுவில் உற்பத்தித் துறைசார் பணியாளர்கள் 71 பேர் மற்றும் மீன்பிடித் துறைசார் பணியாளர்கள் 39 பேர் உள்ளடங்கியுள்ளனர்.
இந்த விடயத்தை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்பு
அதேநேரம், ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்புகளை இலங்கைக்கு திறப்பது குறித்து ஜப்பானில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களின் நிறைவேற்றுக் குழுவுடன், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், ஜப்பானில் பணியாற்றத் தயாராக இருக்கும் இலங்கை நிபுணர்களை, ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைப்பதற்கான தளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
