கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியா சென்றுள்ள புலம்பெயர் பணியாளர்கள்
தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்பிற்காக 110 புலம்பெயர் பணியாளர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நேற்று (05.10.2022) மாலை தென்கொரியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த குழுவில் உற்பத்தித் துறைசார் பணியாளர்கள் 71 பேர் மற்றும் மீன்பிடித் துறைசார் பணியாளர்கள் 39 பேர் உள்ளடங்கியுள்ளனர்.

இந்த விடயத்தை வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்பு
அதேநேரம், ஜப்பானில் நிறைவேற்றுத்தர தொழில்வாய்ப்புகளை இலங்கைக்கு திறப்பது குறித்து ஜப்பானில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களின் நிறைவேற்றுக் குழுவுடன், வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.

மேலும், ஜப்பானில் பணியாற்றத் தயாராக இருக்கும் இலங்கை நிபுணர்களை, ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைப்பதற்கான தளத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
உக்கிரமடையும் ஈரான் போர்... இக்கட்டான நேரத்தில் கைவிரித்த ரஷ்யா: இந்தியாவிற்கு புது சிக்கல் News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஆயுதப்படைகள் எப்போதும் தயார்., ஈரான் விடுத்த எச்சரிக்கைக்கு பிரித்தானியா கொடுத்த பதில் News Lankasri
விருச்சிகத்தில் சந்திரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்! Manithan