ஜனாதிபதிக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
சேவை காலம் முடிந்து இலங்கையிலிருந்து வெளியேறவுள்ள இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அகிரா இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை(Gotabhaya Rajapaksha) சந்தித்துள்ளார்.
ஜப்பான் அரசிடம் இருந்து 6 லட்சம் எஸ்ராசெசேனகா தடுப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் கோவிட் தடுப்பு செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது உட்பட சுகியாமா அகிரா, இலங்கைக்கு வழங்கிய பல்வேறு விதமான உதவிகளுக்கு ஜனாதிபதி நன்றி கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கு இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தி, தேவையான நேரத்தில் இலங்கைக்கு உதவிகளை வழங்க முயற்சிப்பதாக ஜப்பான் தூதுவர் ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவும் கலந்துகொண்டுள்ளார்.