மூன்றாம் உலகப் போர்! ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி
ரஸ்ய ஜனாதிபதி புடினை கண்டித்த ட்ரம்புக்கு முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி மெத்வெதெவ் மூன்றாம் உலகப் போர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை “தீயுடன் விளையாடுகிறார்” என கண்டித்ததைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்றாவது உலகப் போர்
“புடின் தீயுடன் விளையாடுகிறார், ரஷ்யாவுக்கு மிகவும் மோசமான விஷயங்கள் நடக்கலாம்” என்ற ட்ரம்பின் பேச்சுக்கு பதிலடியாக, “ஒரே ஒரு மிக மோசமான விடயம் எனக்குத் தெரியும் - அது மூன்றாவது உலகப் போர் ட்ரம்ப் அதை புரிந்து கொண்டிருப்பார் என நம்புகிறேன்” என்று மெத்வேதெவ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Regarding Trump's words about Putin "playing with fire" and "really bad things" happening to Russia. I only know of one REALLY BAD thing — WWIII.
— Dmitry Medvedev (@MedvedevRussiaE) May 27, 2025
I hope Trump understands this!
ட்ரம்ப் சமீபத்தில், ரஷ்யாவின் தரைவழி மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 13 பேர் பலியாகியதை தொடர்ந்து, மாஸ்கோ மீது புதிய தடைகள் விதிப்பதை நிச்சயமாக பரிசீலிப்பதாக கூறியுள்ளார்.
உக்ரைன் தாக்குதல்களுக்கான பதிலடி
2022 பிப்ரவரியில் உக்ரைனில் போரைத் தொடங்கிய ரஷ்யா தற்போது நடப்பது உக்ரைன் தாக்குதல்களுக்கான பதிலடி என்றும், அமைதி பேச்சுவார்த்தையை உக்ரைன் தடுக்க முயல்கிறது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.
மெத்வேதெவின் மோதலான பதில், உலக அரசியல் தருணங்களை மேலும் பதற்றமாக்கி உள்ளது எனலாம்.
முன்னாள் ஜனாதிபதி மெத்வேதெவ், 2008 முதல் 2012 வரை ரஷ்ய ஜனாதிபதியாகவும், 2012 முதல் 2020 வரை பிரதமராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 3 நாட்கள் முன்

பாகிஸ்தான், சீனா, வங்கதேசத்திற்கு மோசமான செய்தி - இந்தியாவிற்கு R-37M ஏவுகணையை வழங்கும் ரஷ்யா News Lankasri

சீரியலில் தான் ஹோம்லி, ஆனால் நிஜத்தில்.. பாக்கியலட்சுமி திவ்யா கணேஷ் வெளியிட்ட வீடியோவை பாருங்க Cineulagam
