துணை மருத்துவ சேவை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்ட அறிவிப்பு
தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் நாளை (26) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக துணை மருத்துவ சேவைகள் ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக துணை மருத்துவ சேவைகள் ஊழியர்களின் ஒருங்கிணைந்த பொதுக்குழு அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பணிப்புறக்கணிப்பு
குறித்த அறிவித்தலின் பிரகாரம், துணை மருத்துவ சேவை ஊழியர்கள் தொழில்ரீதியாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.
அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் எதுவும் வெற்றியளிக்கவில்லை.
எனவே எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள்ளாக எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத விடத்து வேறு வழியின்றி பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்பதுடன், இலங்கை முழுவதும் உள்ள அரசாங்க மருத்துவமனைகளின் செயற்பாடுகள் முற்றிலும் ஸ்தம்பித்து விடும் என்பதையும் அறியத்தருகின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
