நாமலுக்கு எதிராக பிரித்தானியாவில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்டு யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்த நிலையில் அந்நிறுவனத்தின் முன்பு பெரும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ச, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு யூனியன் (Oxford Union) மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் (Cambridge Union) ஆகிய இரண்டிலும் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.
நாமல் ராஜபக்ச
இருப்பினும், அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட பிரித்தானிய தமிழ் மாணவர் சங்கங்கள், பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு ஆகிய அமைப்புகள் கூட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
தொடர்ச்சியான போராட்டங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக, கேம்பிரிட்ஜ் யூனியன்நிர்வாகம் அவரது உரை நிகழ்த்தும் நிகழ்வை ரத்து செய்ய தீர்மானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சமூக ஊடகங்களில் பரவி வரும் அறிவிப்புகளின்படி, “இனப்படுகொலை மறுப்பவர்களை முன்னிறுத்துவதை நிறுத்துங்கள்” எனக் கோரி போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும், ராஜபக்ஸே நகரில் வரவேற்கப்படமாட்டார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டம் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 23 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு, ஆக்ஸ்ஃபோர்ட் நகரின் ஃப்ரெவின் கோர்ட் பகுதியில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் யூனியன் வளாகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
தமிழ் புலம்பெயர் சமூகத்தின் சில அமைப்புகள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களை திரட்டிக் கொண்டிருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக உறுப்பினர்கள் ஒன்றுபட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு முன்னரும் ராஜபக்ஸே குடும்ப உறுப்பினர்களைச் சுற்றி இதே போன்ற சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

2010 ஆம் ஆண்டு, பாதுகாப்பு கவலைகளை முன்வைத்து Oxford Union, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உரையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அவர்களின் ஐக்கிய இராச்சிய பயணங்களின் போதும் போராட்டங்கள் நடைபெற்றிருந்தன.
இந்நிலையில், திட்டமிடப்பட்டுள்ள போராட்டம் தொடர்பாக ஒக்ஸ்ஃபோர்ட் யூனியன் தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னிப்பு கேட்ட குணசேகரன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam