எகிப்தின் வெற்றியை பறித்த அர்ஜென்டினா..! சர்ச்சையை கிளப்பியுள்ள நடுவரின் முடிவுகள்..
நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா, ஃபிஃபா உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் எகிப்துக்கு எதிராக கடைசி நிமிடங்களில் அபாரமான மீள்வரவை நிகழ்த்தி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
அதேவேளை, இந்தப் போட்டி நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவுகள் காரணமாக உலக கால்பந்து ரசிகர்களிடையே பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
எகிப்தின் அபார தொடக்கம்
போட்டி தொடங்கியதிலிருந்தே எகிப்து வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
உலக சாம்பியனான அர்ஜென்டினாவை திணறடித்த அவர்கள் இரண்டு கோல்கள் அடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றனர்.

இந்த முன்னிலையுடன், உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக நாக்-அவுட் சுற்றை கடக்கும் வாய்ப்பை எகிப்து நெருங்கியிருந்தது.
ஆனால் முதல் பாதியிலேயே முஸ்தஃபா ஜிகோ அடித்ததாகக் கருதப்பட்ட மற்றொரு கோல், வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரி (VAR) பரிசீலனைக்குப் பிறகு ஃபவுல் காரணமாக நிராகரிக்கப்பட்டது.
இந்த முடிவு எகிப்து வீரர்களையும் பயிற்சியாளர்களையும் கடும் அதிருப்திக்குள்ளாக்கியது.
நான்கு நிமிடங்களில் மெஸ்ஸியின் மாயம்
போட்டி இறுதி கட்டத்தை எட்டியபோது, 79-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கிறிஸ்டியன் ரொமேரோ ஒரு கோல் அடித்து கணக்கை 2-1 ஆக மாற்றினார். இந்த கோல் அர்ஜென்டினாவுக்கு புதிய உயிர்ப்பை ஊட்டியது.
ரொமேரோவின் கோலுக்கு நான்கு நிமிடங்களுக்குப் பிறகு, அர்ஜென்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தனது அனுபவத்தை வெளிப்படுத்தினார்.

அவர் அடித்த அற்புதமான கோல் மூலம் போட்டியை 2-2 என சமநிலைக்கு கொண்டு வந்தார்.
உலகம் முழுவதும் "GOAT" என அழைக்கப்படும் மெஸ்ஸி, மிக முக்கியமான தருணத்தில் தனது அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார்.
போட்டி கூடுதல் நேரத்துக்குள் சென்ற நிலையில், ஸ்டாப்பேஜ் டைமின் இரண்டாவது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான முக்கிய கோலை பதிவு செய்தார்.
இதன் மூலம் அர்ஜென்டினா 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று, அந்த முன்னிலையை இறுதி வரை தக்க வைத்துக்கொண்டு காலிறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது.
சர்ச்சையை கிளப்பிய நடுவரின் முடிவுகள்
இந்தப் போட்டியில் பிரெஞ்சு நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியரின் தீர்ப்புகள் மிகப்பெரிய பேசுபொருளாக இருந்தது.
VAR மூலம் எகிப்தின் இரண்டாவது கோல் நிராகரிக்கப்பட்டது முதல், போட்டியின் இறுதி நேரத்தில் முகமது சலா பெனால்டி பகுதியில் ஃபவுல் செய்யப்பட்டதாக எகிப்து வீரர்கள் முறையிட்ட சம்பவம் வரை பல முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
⛔️The Worldwide FIFA Scandal ‼️
— Dr.Sam Youssef Ph.D.,Ph.D.,DPT. (@drhossamsamy65) July 7, 2026
⛔️ A video of MORE than 4 minutes of robberies from Zionist Argentina TODAY against Egypt.‼️ pic.twitter.com/j3qzRv9p86
ஆனால் நடுவர் ஆட்டத்தைத் தொடர அனுமதித்தார். இதையடுத்து எகிப்து வீரர்களும் பயிற்சியாளர்களும் பலமுறை நடுவரிடம் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
போட்டி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது. எகிப்தின் யாசர் இப்ராஹிம் மஞ்சள் அட்டை பெற்றார். இரு அணி வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் நடுவர்கள் தலையிட்டு அவர்களைப் பிரித்தனர்.

எகிப்து அணியின் அதிகாரி சஃபான் எல்சாகிருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹசனுக்கும் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது.
சோகத்தில் மூழ்கிய எகிப்து ரசிகர்கள்
போட்டி முடிந்த பிறகு பேசிய எகிப்து கேப்டன் ஹொசாம் ஹசன், "எங்கள் அணி அநீதியான முறையில் நடத்தப்பட்டது.
மைதானத்துக்குள்ளும் வெளியேயும் கேள்விக்குள்ளாக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன." என்று குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து பெறுவதற்காக ஃபிஃபாவை தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்டி முடிந்ததும் கெய்ரோவில் பொதுத்திரைகளில் போட்டியை பார்த்திருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கண்ணீருடன் காணப்பட்டனர்.

கிட்டத்தட்ட வெற்றியை கைப்பற்றியிருந்த நிலையில் கடைசி நிமிடங்களில் தோல்வி அடைந்தது அவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
காஸாவிலும் பல பாலஸ்தீன ஆதரவாளர்கள் எகிப்து கொடியை ஏந்தி அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
கொண்டாட்டத்தில் அர்ஜென்டினா
மறுபுறம், இந்த அதிரடி வெற்றிக்குப் பிறகு அர்ஜென்டினா ரசிகர்கள் மைதானத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடினர்.
உணர்ச்சிவசப்பட்ட லியோனல் மெஸ்ஸி தனது அணியினருடன் வெற்றியை கொண்டாடிய நிலையில், போட்டி முடிந்ததும் சக வீரர்கள் அவரை தோளில் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பல சர்ச்சைகள், கடைசி நிமிட திருப்பங்கள் மற்றும் பரபரப்பான ஆட்டத்திற்குப் பிறகு, 2-0 என்ற பின்தங்கிய நிலையிலிருந்து 3-2 என்ற வெற்றியைப் பதிவு செய்த அர்ஜென்டினா, நடப்பு உலக சாம்பியனாக தனது சாம்பியன் மனப்பாங்கை மீண்டும் நிரூபித்து காலிறுதிப் போட்டிக்கான இடத்தை வெற்றிகரமாக உறுதி செய்தது.
