நாட்டில் மேலும் பல கோவிட் தொற்றாளர்கள் அடையாளம்: இற்றைவரை நிலவரம்
நாட்டில் மேலும் 722 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 563,989 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் மேலும் 347 பேர் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை நாட்டில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 540, 387 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கோவிட் தொற்றுக்குள்ளான மேலும் 8, 552 பேர் சிகிச்சை மையங்களிலும், வீடுகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri
