மன்னார் - பள்ளிமுனை கிராம கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்
மன்னார் - பள்ளிமுனை கிராம பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி அந்த பிரதேச கடற்றொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (06.03.2024) காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிமுனை புனித லூசியா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டமானது, பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதிக்கு முன் ஆரம்பமானதுடன் மன்னார் மாவட்டச் செயலகம் வரை அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம்
இதன் போது, போராட்டக்காரர்கள் தமது வாழ்வாதாரத்தையும் தமக்கான இடங்களை தக்கவைப்பதிலும் பல்வேறு இடையூறுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், மன்னார் சௌத்பார் கடற்றொழில் துறையில் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம்
மற்றும் கடற்றொழில் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அது மாத்திரமன்றி, கடற்றொழிலாளர்கள் முந்தல் காணி எல்லை மற்றும் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை, சிறு தொழில் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள கரையோர கடலட்டை பண்ணை போன்றவற்றை அகற்றுதல் உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மகஜர் முன்வைப்பு
அதே நேரம், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, குறித்த கிராம மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளதுடன் போராட்ட முடிவில் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
