நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் இன் நாடாளுமன்ற உறுப்புரிமை தற்காலிமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விழுமியங்கள் மற்றும் சிறப்புரிமைகள் தொடர்பான துறைசார் குழுவின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறப்புரிமைகள் அபகரிப்பு
அதன் பிரகாரம் இன்று(06.03.2024) தொடக்கம் அவர் எதிர்வரும் ஒரு மாத காலத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பயன்படுத்தவோ, அதற்கான சிறப்புரிமைகளைப் பயன்படுத்தவோ முடியாது.
அத்துடன் குறித்த காலப்பகுதியில் அவர் நாடாளுமன்ற அமர்வுகளுக்கும் சமூகமளிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |