பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Batticaloa Pillayan Sivanesathurai Santhirakanthan
By Mayuri Jul 13, 2026 09:23 AM GMT
Report

மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற 5 கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவர் உட்பட 3 பேரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (13) காணொளி ஊடாக உத்தரவு பிறப்பித்தது.ஷ

அத்துடன் மற்றைய சந்தேகநபரான இலண்டனில் உள்ள பொலிஸ் பாயிஸ் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2008ஆம் ஆண்டு கல்லடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை, ரி.எம்.வி.பி கட்சி உறுப்பினர் காத்தான்குடியில் வைத்து சுட்டுக்கொலை, வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்ட ஏற்கனவே கைது செய்யப்பட்ட பிள்ளையான் மற்றும் காத்தான்குடியை சேர்ந்த இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான முகமட் சிபான், முகமட் சகீத் ஆகியோரை கடந்த 2025 நவம்பர் மாதம் சிஐடியினர் கைது செய்தனர்.

கடல் அலையில் சிக்கி 19 வயதான இளைஞர் உயிரிழப்பு - தங்காலையில் துயரம்

கடல் அலையில் சிக்கி 19 வயதான இளைஞர் உயிரிழப்பு - தங்காலையில் துயரம்

இந்த 5 முக்கிய மனிதக் கொலைகளுடன் தொடர்புபட்ட பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இலண்டனில் உள்ள காத்தான்குடியைச் சேர்ந்த முகம் பாய்ஸ், உட்பட 4 பேருக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் கடந்த ஜுன் 17ஆம் திகதி சிஐடியினர் வழக்கு தாக்கல் செய்ததையடுத்து அவர்களை ஜுன் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் அன்றைய தினம் நீதிமன்றில் பிள்ளையான் உட்பட்ட 3 பேரையும் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Pillayan S Remand Extended Further

இதனையடுத்து 3 பேரும் தொடர் விளக்கமறியலில் இருந்து வருகின்ற நிலையில் இன்று (13) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கை விசாரணைக்காக நீதவான் எடுத்துக் கொண்டபோது சந்தேகநபரான இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளியான முகமட் சிபானை மட்டும் முன்னிலைப்படுத்திய சிஐடியினர் பிள்ளையான் மற்றும் சந்தேகநபர் ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணமாக நீதிமன்றிற்கு அழைத்துவர முடியாதது தொடர்பாக நீதிமன்றிற்கு தெரிவித்தனர்.

இதனை ஆராய்ந்த நீதவான் பிள்ளையான் மற்றைய சந்தேகநபர் ஆகிய இருவரையும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சிறைகளில் (சூம்) இணைய வழி காணொளி ஊடாக பார்வையிட்டு இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும் பொலிஸ் பாய்ஸ்க்கு பிடியாணை பிறப்பித்து கட்டளையிட்டு உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை கடந்த 30ஆம் திகதி பிள்ளையான் உட்பட 3 பேரையும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அழைத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான தகவல்

மேலதிக தகவல் - பவன்

முதலாம் இணைப்பு

'பிள்ளையான்' என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு விளக்கமறியல் நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்

வாழ்க்கையில் நான் கண்ட மெய்சிலிர்க்க வைத்த தாக்குதல்..! காயமடைந்த சிறை அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்கள்

விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு

இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.   

அதன்படி பிள்ளையான், எதிர்வரும் 24ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

 பிள்ளையானுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு | Pillayan S Remand Extended Further

இதேவேளை குறித்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US