10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதாக தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய கடற்றொழிலாளர்களுக்கு, 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அது எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (26.03.2026) மன்னார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவு
கடந்த மாதம் 19ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், 2 படகுகளுடன் குறித்த 10 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, நேற்று (26) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று அவர்கள் மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், 10 பேருக்கும் 10 வருட சிறை தண்டனையை விதித்து, அதனை 12 மாதங்களுக்கு ஒத்திவைத்து விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், ஒவ்வொரு கடற்றொழிலாளருக்கும் தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், வழக்கில் பயன்படுத்தப்பட்ட சான்றுப் பொருட்களை அரசுடமையாக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri