உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களால் ரஷ்யாவில் தீவிரமடையும் எரிபொருள் தட்டுப்பாடு
உக்ரைன் படைகள் நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களால் ரஷ்யா மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் கிரிமியா பகுதியில் தொடங்கிய இந்த தட்டுப்பாடு, தற்போது ரஷ்யாவின் தெற்குப் பகுதிகள் மற்றும் தலைநகர் மொஸ்கோ வரை தீவிரமாகப் பரவியுள்ளது.
ஜனாதிபதி ட்ரம்ப் எடுத்த முயற்சிக்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடை! வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள்
உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், ரஷ்யாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள வாகன சாரதிகளுக்கு எரிபொருள் வழங்குவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்களுடன் நடத்திய அவசரக் கூட்டத்தில், உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களால் சில பிராந்தியங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார்.

எனினும், நிலைமையைச் சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
கிரிமியாவின் மிகப்பெரிய நகரமான செவஸ்டோபோலில் திங்கட்கிழமை (ஜூன் 29) அன்று பொதுமக்களுக்குக் குறைந்த அளவில் பெற்றோல் விற்பனை செய்யப்பட்டபோது, வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கினர்.
அங்கு ஒரு லீட்டர் பெற்றோல் வழக்கமான விலையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக, அதாவது 189 ரூபிள் என்ற மிக உயர்ந்த விலைக்கு விற்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு
கிரிமியா மட்டுமின்றி, உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள தெற்கு ரஷ்ய நகரமான ரோஸ்டோவ்-ஆன்-டான் பகுதியிலும் பல பெற்றோல் பங்க்குகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஒரு வாரத்திற்கு முன்பு உக்ரைன் ட்ரோன் தாக்குதலால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று தகர்க்கப்பட்ட தலைநகர் மொஸ்கோவிலும் தற்போது அதன் பாதிப்புகள் தெரியத் தொடங்கியுள்ளன.

மொஸ்கோவில் உள்ள அரசுக்குச் சொந்தமான பெரிய நிறுவனங்களின் பங்குகளில் விலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், தனியார் பெற்றோல் பங்க்குகளில் எரிபொருள் விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து ஒரு லிட்டர் 80 ரூபிள் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு ரஷ்யாவின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலியைப் பெரிதும் முடக்கியுள்ளது.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri