திருகோணமலையில் வாகன விபத்து: வயோதிபர் பலி
திருகோணமல(Trincomalee) கிண்ணியா- உப்பாறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (18.11.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், தாமரவில், கண்டலடியூற்று பகுதியைச் சேர்ந்த மகமூத் ஷரீப் (65வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரணில் தரப்பு தேசியப் பட்டியல் விவகாரம்! இறுதி தீர்மானத்திற்கு தயாராகும் கட்சி
மேலதிக விசாரணை
உயிரிழந்த வயோதிபர் குறித்த வீதியால் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி, திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருவகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்கா மீது பதிலடி கொடுக்கும் வகையிலான கனடாவின் வரிகள்: எந்தெந்த பொருட்கள் பாதிக்கப்படும்? News Lankasri
AI மூலம் 80-ஸ்க்கு சென்ற பிரபலங்கள்.. அதேபோல் நீங்களும் மாற இந்த Prompt-ஐ பயன்படுத்துங்கள் Cineulagam