கடல் ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது
கடல் ஆமை முட்டைகளை விற்பனை செய்ய முயற்சித்த நபரை கல்கிஸ்சை சுற்றாடல் பிரிவு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் கல்கிஸ்சை வெடிகந்த கடற்கரையில் 30 கடல் ஆமை முட்டைகளை விற்பனை செய்வதற்காக தன்வசம் வைத்திருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வெடிகந்தை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கடல் ஆமை முட்டைகளை வைத்திருப்பது, உணவுக்காக பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
கடல் ஆமைகள் கடற்கரைகளில் வந்து முட்டையிடும். அந்த முட்டைகளை சிலர் எடுத்து அவற்றை உணவுக்காக விற்பனை செய்து வருகின்றனர்.