திருகோணமலையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து அரச பேருந்தில் ஐஸ் போதைப் பொருளை கொண்டு வருவதாக பொலிஸ் போதைப் பொருள் திருகோணமலை பிரிவினருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பாலம் போட்டாறு பொலிஸ் சோதனை சாவடியில் குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 11 கிரேம் 120 மில்லி கிரேம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிண்ணியா- குட்டிக்கராச்சி பகுதியைச் சேர்ந்த மாயாஜால வித்தைக்காரர் (30வயது) எனவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை செய்து வருவதுடன், விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
