சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியுடன் ஒருவர் கைது
மன்னார் பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள உயிலங்குளம் பகுதியில்
மாட்டு இறைச்சி விற்பனை நிலையத்தில்
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சட்ட விரோதமான முறையில் வெட்டப்பட்ட ஒரு
தொகுதி மாட்டு இறைச்சியை சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளதாக பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரோய் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதகர் கே.சி. வின்சன் மற்றும் உயிலங்குளம் பொதுச் சுகாதார பரிசோதகர் ரூபன் றொனி சில்வா ஆகியோர் இணைந்து மேற்படி சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி மாட்டு இறைச்சியை மீட்டுள்ளனர்.
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் அனுமதி இன்றியும், மாடு வெட்ட வேண்டிய உரிய இடத்தில் வெட்டாமலும், வீடு ஒன்றில் வைத்து சட்ட விரோதமான முறையில் வெட்டி விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த மாட்டு இறைச்சியினை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மீட்டுள்ளனர்.
மேலும் சட்ட விரோதமாக வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற ஒருவர் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது குறித்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில்
செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
மீட்கப்பட்ட மாட்டு இறைச்சி
நீதி மன்றத்தின் உத்தரவுக்கு அமைவாக அழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என
அவர் மேலும் தெரிவித்துள்ளார்.