கேரளா கஞ்சாவை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றவர் கைது
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கொண்டு சென்ற நபரொருவரை இன்று கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்னாரில் இருந்து திருகோணமலைக்கு கஞ்சாவினை கொண்டு செல்லும் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
விமானப்படையினரின் புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து திருகோணமலை சர்தாபுர விசேட பொலிஸ் அதிரடிப்படை பொறுப்பதிகாரி குழுவினர் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் என்.சீ. வீதியினூடாக மணிக்கூட்டு கோபுரம் பக்கமாக செல்லும் போது சோதனையிட்ட போது அவரிடமிருந்து 01 கிலோ 250 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அவரின் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை- சமுத்ராகம ஓட்டை வீதியில் வசித்துவரும் துவான் ரஹீம் ஆப்தீன் (53 வயது) உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேக நபரை விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையின் பின்னர் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri