மட்டக்களப்பில் கஜ முத்துக்களுடன் சந்தேக நபர் கைது
மட்டக்களப்பு (Batticaloa) காந்தி பூங்கா பகுதியில் 2.5 மில்லியன் பெறுமதியான 11 கஜ முத்துக்களுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே நேற்றையதினம் (29.04.2024) மாலை இவ்வாறு கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, மட்டகளப்பு காந்தி பூங்காவில் அதிகாரிகள் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, மயிலவெட்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கஜ முத்துக்களை வியாபாரம் செய்வதற்காக எடுத்து வந்து காத்தக் கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில், அங்கு மாறுவேடத்தில் இருந்த விசேட அதிரடிப்படையினர் (CID) அவரை சுற்றிவழைத்து மடக்கி பிடித்து கைது செய்ததுள்ளனர்.
இதற்கமைய, சந்தேக நபரால் வியாபாரத்துக்காக எடுத்து வரப்பட்ட சட்ட விரோதமான 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 11 கஜ முத்துக்களை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸாருக்கு சட்டத்தரணிகள் இடையூறு செய்யக் கூடாது: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
