குற்றச் செயல்களை தடுக்கும் பொலிஸாருக்கு சட்டத்தரணிகள் இடையூறு செய்யக் கூடாது: முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு சட்டத் தரணிகள் இடையூறு விளைவிக்க கூடாது என நாரஹேன்பிட்டி அபயாராம விஹாரையின் விகாராதிபதி ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்
பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், போதைப் பொருள் மற்றும் பாதாள உலகம் குழுச் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் யுத்திய என்னும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை சீர்குலைக்கும் வகையில் சட்டத்தரணிகள் செயற்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
கொலை சம்பவங்கள்
“நாட்டில் போதைப்பொருள் மற்றும் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. பொலிஸ்மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து புதிய திட்டம் ஒன்றை உருவாக்கி இந்த பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஏதாவது ஒரு வழியில் இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
இந்த நடவடிக்கையை சீர்குலைப்பதற்கு சில சட்டத்தரணிகள் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனை செய்யக்கூடாது.
போதைப் பொருள் கொலை மற்றும் பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
