இளைஞர்கள் மத்தியில் வேகமாக பரவும் டெங்கு: எச்சரிக்கும் சுகாதாரத்துறை
இளைஞர், யுவதிகள் மத்தியில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுவரை பதிவாகியுள்ள நோயாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளனர்.
கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தெளிவான அதிகரிப்பு உள்ளது.

அதிக நோயாளர்கள்
அதன்படி, ஜனவரி மாதம் முதல் இதுவரை 47,000க்கும் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு பதிவாகியுள்ள நோயாளிகளில் 75 சதவீதம் பேர் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

டெங்கு ஒரு வைரஸ், எனவே டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவரை நுளம்பு கடித்தால், அந்த நுளம்பு மற்றொரு நபரைத் தாக்கும்.
இது முன்னர் சிறு பிள்ளைகளுக்கு பரவி வந்த போதிலும், தற்போது இளைஞர்களிடையே இந்நோய் பரவும் போக்கு அதிகமாக காணப்படுவதாக விசேட நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.
டெங்கு ஒழிப்பு

எதிர்வரும் மழைக்காலத்துடன் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளதால் டெங்கு ஒழிப்பு தொடர்பில் சகல துறைகளினதும் அவதானம் அதிகரிக்கப்பட வேண்டுமென ஆனந்த விஜேவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தினாலோ அல்லது சுகாதார திணைக்களத்தினாலோ மாத்திரம் செயற்பட முடியாது எனவே இதற்கு அனைத்து மக்களின் ஆதரவும் அவசியமானது என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam