பண்டாரநாயக்க முன்னரே கொல்லப்பட வாய்ப்புக்கள் இருந்திருக்கும்! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்
நாட்டின் தலைவர் எந்தளவுக்கு தூய்மையானவராகவும் நேர்மையானவராகவும் சிறந்த நோக்கங்களை கொண்டிருந்தாலும் அவர் வெற்றிகரமான தலைவராக மாற வேண்டும் என்றால், நேர்மையான அமைச்சரவை இருக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன(Maithripala sirisena) தெரிவித்துள்ளார்.
சிறிமாவே பண்டாரநாயக்கவுடன் வேலை செய்யக் கூடிய நேர்மையான அமைச்சரவை இருந்ததன் காரணமாகவே அவருக்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியல் உண்மையான மக்கள் சார்பு தலைவராக மாற முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 1970 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் மாத்திரமல்லாது, எஸ்.டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 1957 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இருந்து அமைச்சரவையில் இருந்து 1947 ஆம் ஆண்டுக்கு பின்னர் நாட்டின் அரசாங்கத்தில் இருந்த அமைச்சரவையானது மிகவும் அறிவுசார்ந்த அமைச்சரவை.
கடந்த மூன்று, நான்கு வருடங்களில் இருந்த விதத்தில் அமைச்சர்கள் அந்த காலத்தில் இருந்திருப்பார்கள் எனில், பண்டாரநாயக்க கொலை செய்யப்பட்ட நாளுக்கு பல காலங்களுக்கு முன்னர் கொல்லப்பட வாய்ப்பு இருந்திருக்கும் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவியும் முன்னாள் பிரதமருமான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு அந்த கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மைத்திரிபால சிறிசேன இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளா