கெஹெலிய வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் கைது
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையில் இன்று (11) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சுக்கு பெயரளவிலான நியமனங்களை வழங்குவதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் கூடுதல் நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் ஆணைக்குழு தற்போது நடத்தி வருகிறது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில் குறித்த விசாரணையுடன் தொடர்புடைய காரணத்தினால் இந்த பணிப்பெண் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

எம்பிலிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த ராஜபக்ச சுபசிங் பத்திரனகே நிபுனி கிருஷ்ணாஜின என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam