கைக்குண்டுடன் இராணுவச் சிப்பாய் கைது
கொழும்புக்கு அருகே நடைபெற்ற பொலிஸ் சோதனை நடவடிக்கையொன்றின் போது கைக்குண்டு ஒன்றுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு அருகே கடவத்தைப் பிரதேசத்தில் மஹகடே சந்தியில் இன்று(11) காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இராணுவச் சிப்பாய் கைது
முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்ட போது அதற்குள் இருந்தவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோணஹேன, கடவத்தை, எல்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
ஆலிவர் பின்னால் இருக்கும் அந்த நபர் இவர்தானா, அடுத்த வில்லன் ரெடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam