கைக்குண்டுடன் இராணுவச் சிப்பாய் கைது
கொழும்புக்கு அருகே நடைபெற்ற பொலிஸ் சோதனை நடவடிக்கையொன்றின் போது கைக்குண்டு ஒன்றுடன் இராணுவச் சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்புக்கு அருகே கடவத்தைப் பிரதேசத்தில் மஹகடே சந்தியில் இன்று(11) காலை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இராணுவச் சிப்பாய் கைது
முச்சக்கர வண்டியொன்றை நிறுத்தி பொலிஸார் சோதனையிட்ட போது அதற்குள் இருந்தவர்களிடம் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோணஹேன, கடவத்தை, எல்பிட்டிய பிரதேசங்களைச் சேர்ந்த மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் உள்ளடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss: இது உங்க வீடு இல்லை... நீங்க கெஸ்ட் இல்லை! நண்பன் மனைவியிடம் சீறி பாய்ந்த விஜய் சேதுபதி Manithan
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam