கரி ஆனந்தசங்கரிக்கு எதிராக இனவெறி கருத்துக்கள்: கண்டிக்கும் தமிழ் அமைப்புக்கள்
கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கரி ஆனந்தசங்கரிக்கு எதிரான கருத்துக்களை, கனேடிய தமிழ் அமைப்புகள் கண்டித்துள்ளன.
அவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் இனவெறித் தாக்குதல்கள், தமிழ் கனேடிய சமூகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்று அந்த தமிழ் அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
கனேடிய தமிழ் கூட்டு, கனடிய தமிழர்களின் தேசிய சபை மற்றும் தமிழ் உரிமைகள் குழு என்பனவே அமைச்சர் ஆனந்தசங்கரி மீதான மீதான விமர்சனங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளன.
விமர்சனங்கள்
கனேடிய தமிழ் சமூகம் தொடர்பான எந்தவொரு தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளிலும் முரண்படாத திரையிடலை செயல்படுத்துமாறு, ஆனந்தசங்கரி, கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதை அடுத்தே, அவர் மீது இனவெறித் தன்மைக்கொண்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும், அறிவிப்பு, மிகுந்த எச்சரிக்கையுடன், எந்தவொரு மோதலும் இல்லை என்பதை உறுதி செய்வதற்காகவே மேற்கொள்ளப்பட்டது என கனேடிய அமைச்சர் ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
