வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் அனுப்பிய பெருந்தொகை பணம்
2026 ஜனவரியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு மொத்தம் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை அனுப்பியதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பணம் அனுப்பும் தொகை அதிகரிப்பு
அதன்படி, 2025 ஜனவரியில் வெளிநாட்டு பணம் அனுப்பும் தொகை 573.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2026 ஜனவரியில் வெளிநாட்டு பணம் அனுப்பும் தொகை 178.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளது.
மேலும், 2026 ஜனவரியில் சுற்றுலா வருமானமாக 378.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்டப்பட்டதாகவும் அறிக்கை கூறுகின்றது.
இருப்பினும், 2025 ஜனவரியில் சுற்றுலா வருமானம் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், இது ஜனவரி 2026 உடன் ஒப்பிடும்போது 5.6 சதவீதம் குறைவு என்றும் இலங்கை மத்திய வங்கி மேலும் கூறுகின்றது.