அநுர அரசின் செயற்பாட்டால் உலகளாவிய ரீதியில் மோசமாக மாறியுள்ள கொழும்பு
உலகிலேயே அதிக வீட்டு விலைகளைக் கொண்ட நகரங்களில் ஒன்றாக கொழும்பு மாறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
பிராந்தியத்தில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இலங்கையில் சீமெந்து விலை மற்ற நாடுகளை விட 45 சதவீதம் அதிகமாகவும், பல நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையில் இரும்பின் விலை 75 சதவீதம் அதிகமாகவும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரி முறை
இதற்கு முக்கிய காரணம் நாட்டில் தற்போதுள்ள வரி முறையே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய, அரசாங்கம் தற்போதுள்ள வரி முறைக்கு கவனம் செலுத்த வேண்டும் என்று ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கட்டுமான துறைக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்