அன்றே முடக்கியிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது - எச்சரிக்கும் தேரர்! செய்திகளின் தொகுப்பு
சுகாதார அமைச்சின் ஸ்திரமற்ற செயற்பாடுகள் காரணமாக எவ்வித திட்டமிடலும் இன்மையால் வைரஸ் தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், சுகாதார அமைச்சின் ஸ்திரமற்ற செயற்பாடுகளின் காரணமாக எவ்வித திட்டமிடலும் இன்மையால் வைரஸ் தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு காணப்பட்டாலும், அவரது இலக்கை அடைவதற்கு செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடியவர்களை உரிய முறையில் செயற்படாவிட்டால் வெற்றி பெற முடியாது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,