யாழில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின் வெளியான அறிக்கை - செய்திகளின் தொகுப்பு
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் நோய்த் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த நபர் நேற்று முற்பகல் உயிரிழந்ததை தொடர்ந்து சடலம் நண்பகலளவில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கோவிட் நோய்த் தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,