வெனிசுலாவை அடுத்தடுத்து உலுக்கிய நிலநடுக்கங்கள் - முழு குடும்பத்தை இழந்த கால்பந்து வீரர்
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அர்ஜென்டினாவை சேர்ந்த கால்பந்து வீரர் லூகாஸ் ட்ரெஜோவின் மனைவி மற்றும் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
வெனிசுலாவில் 24 திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கடலோர பகுதியான பிளாயா கிராண்டேவில் வசித்து வந்த மனைவி மற்றும் இரு குழந்தைகள் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து உயிரிழந்துள்ளனர்.
74 மணிநேர தேடல்
இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், 74 மணி நேர தேடலுக்கு பின்னர் மூவரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களும் கால்பந்து வீரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தின் போது கால்பந்து வீரரான லூகாஸ் ட்ரெஜோ வேறொரு நகரத்தில் விளையாடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகின்றது.
55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்
இதேவேளை, வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 1,450 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 100 வருடங்கள் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மற்றும் பல்வேறு கட்டடடங்களும் சரிந்து விழுந்துள்ளன.
குறித்த பகுதியில் மீட்பு படையினர் தொடர்ந்தும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதுடன், 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர்.
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri