புலிகள் வருகின்றனர் என கிராமவாசிகளை அச்சுறுத்திய நபர்கள் கைது
விடுதலைப் புலிகள் வருகின்றனர் என அம்பாறை நவகிரியாவ காட்டில் இருந்து கத்தி கூச்சலிட்டு, கிராமவாசிகளை அச்சத்திற்கு உள்ளாகி, பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 7 பேர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டதாக பக்கிஹெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
“புலிகள் வெட்டுகின்றனர்” என சிலர் கூக்குரலிடும் சத்தம் கேட்டு, மின்சார வேலிளுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்த சிவில் பாதுகாப்பு படையினர் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், பக்கிஹெல்ல பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனடிப்படையில், அம்பாறை மற்றும் அரந்தலாவ விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர், பொலிஸாருடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்டனர்.
இதன் போது சந்தேக நபர்கள் சென்றிருந்த மோட்டார் சைக்கிள், மூன்று சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன அருகில் உள்ள வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது திவுலான காட்டுப் பகுதியை நோக்கி தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 5 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
