நாளை முதல் மேலும் சிலருக்கான பணம் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும்: மக்களுக்கு அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்திற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலனை செய்யும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினர் கமல் பத்மசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகள் நாளைய தினம் (01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும்.

இலட்சக்கணக்கானோருக்கு கிடைக்கவுள்ள கொடுப்பனவு
சுமார் 6 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை குறித்த நலன்புரி திட்டத்திற்கான பணத்தை மக்கள் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பூரணை விடுமுறை தினமான நேற்றும் மக்கள் வங்கி, இலங்கை வங்கி உள்ளிட்ட வங்கிகள் திறக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri