அஸ்வெசும பயனாளர்களுக்கு சாதகமான அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் கீழ் இடைநிலை பிரிவின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், அந்த வகையினருக்கான 2500 ரூபா கொடுப்பனவை 5000 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (10.01.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நிவாரண உதவித் திட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், மேலும் 4 இலட்சம் பேரை நிவாரண உதவித் திட்டத்திற்கு உள்வாங்கத் தயாராக இருக்கின்றோம்.
இந்த வேலைத்திட்டத்தின் மூலம் 20 இலட்சம் பேர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தற்போதைய பொருளாதார நிலைமையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை நான்கு இலட்சத்தால் அதிகரிக்கப்படும்.
எனவே ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் புதிய விண்ணப்பங்கள் கோரப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan
