கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெருந்தொகை தங்கம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் 09 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
தங்கத்துடன் இந்தியாவைச் சேர்ந்த இரண்டு பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.
தங்கம் மீட்பு
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இந்த தங்கத்தை வெளியில் கொண்டு வருவதில் ஈடுபட்ட விமான நிலைய ஊழியர் ஒருவரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.