பீடி உற்பத்தியாளரை தாக்கிய மதுவரி அதிகாரிகள்
பீடி உற்பத்தியாளர் ஒருவரை தாக்கி இலஞ்சம் பெற முயற்சித்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மதுவரி திணைக்கள அதிகாரிகளை பணி இடைநிறுத்தம் செய்ய மதுவரி ஆணையாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் குறித்து கண்டறிந்து, தரம் பாராமல் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் அறிவுறுத்தியுள்ளார்.
உற்பத்தியாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
வலஸ்முல்லையில் உள்ள பீடி உற்பத்தியாளரின் உரிமம் கடந்த ஜூன் 26ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில், இதன் காரணமாக கடந்த 18ஆம் திகதி தங்காலை மதுவரி பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் அங்கு சென்று உற்பத்தியாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னர் நீதிமன்றத்திற்கு செல்லாமல் தீர்வு காணும் வகையில் பீடி உற்பத்தியாளரிடம் 14 இலட்சம் ரூபா பணம் கோரப்பட்டுள்ளதாகவும் அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த நபரை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று தாக்கி 10 இலட்சம் ரூபா பணத்தினை பலவந்தமாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிசிரீவி காட்சி
இந்த சம்பவம் தொடர்பான சிசிரீவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக பீடி உற்பத்தியாளர் வலஸ்முல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள நிலையில்,விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 05 சந்தேக நபர்களை நேற்று (25.09.2023) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri