ஐ.சி.சிக்கு இலங்கை கிரிக்கெட் சபையிலிருந்து பறந்த கடிதங்கள்: பரிசீலிப்பதாக ரணில் உறுதி
சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு, இலங்கை கிரிக்கெட் சபையால் அனுப்பப்பட்ட மூன்று கடிதங்கள் குறித்து ஆராயவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22.11.2023) தெரிவித்துள்ளார்.
கடிதங்கள் தொடர்பாக பரிசீலனை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் விடுத்த கேள்விக்கு பதிலளித்த போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் தலையீடுகளின் காரணமாக இலங்கையில் கிரிக்கெட்டை இடைநிறுத்துமாறு நவம்பர் 6, 7 மற்றும் 9ஆம் திகதிகளில் இலங்கை கிரிக்கெட் சபையினால் ஐ.சி.சிக்கு மூன்று கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த கடிதங்களை தனக்கு அனுப்பி வைக்குமாறு சஜித்திடம் கோரிக்கை விடுத்த ஜனாதிபதி, அவை தொடர்பாக பரிசீலிப்பதாக உறுதியளித்ததோடு மூன்று கடிதங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக சஜித் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
திருமணத்திற்காக இந்தியா வந்துள்ள டிரம்ப் மகன், ஜெனிபர் லோபஸ் - யார் இந்த நேத்ரா மந்தேனா? News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan