முன்னாள் இராணுவச் சிப்பாய் மூலம் பாதாள உலகக் கும்பலால் லசந்த சுட்டுப் படுகொலை

CID - Sri Lanka Police Sri Lanka Police Crime
By Rakesh Oct 25, 2025 04:42 AM GMT
Report

இராணுவத்தை விட்டு வெளியேறிய சிப்பாய் ஒருவருக்கு வழங்கப்பட்ட நிதி ஒப்பந்தம் ஊடாக தென் மாகாணத்தில் இயங்கும் பாதாள உலகக் கும்பலால், வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்கிரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலையைச் செய்த கொலையாளி இப்போது அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவரைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழு விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு

துப்பாக்கிச்சூடு 

துப்பாக்கிச்சூடு நடந்த நேரத்தில் பதிவான சிசிரிவி காட்சிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையின் போது கொலையாளியை அடையாளம் காண முடிந்ததாக விசாரணைக் குழுக்கள் தெரிவித்தன.

முன்னாள் இராணுவச் சிப்பாய் மூலம் பாதாள உலகக் கும்பலால் லசந்த சுட்டுப் படுகொலை | Lasantha Wickramasekara Death Cid Investigation

இதற்கிடையில், கொலையாளி மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் ஆகியோர் லசந்த விக்கிரமசேகரவைக் கொலை செய்த பிறகு அவர்கள் சென்ற வழியைக் கண்டறிய நேற்று முதல் பொலிஸார் அந்தப் பகுதியில் உள்ள சிசிரிவி கமராக்களை ஆய்வு செய்யத் தொடங்கினர்.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் மற்றொரு கூட்டாளியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார் எனவும், வழியில் இருவரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர் எனவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கொலை நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் நடந்த உரையாடல்கள் குறித்த தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கைகளையும் பொலிஸார் பெற்று, அதன் அடிப்படையில் தனி விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் மரணத்திற்கான காரணம் இதுதான்..உறுதியான தகவல்

வெலிகம பிரதேச சபைத் தலைவரின் மரணத்திற்கான காரணம் இதுதான்..உறுதியான தகவல்

 இரகசிய வாழ்க்கை 

இந்தக்கொலையில் மிதிகம ருவான், மிதிகம சுட்டி மற்றும் ஹரக்கட்டா ஆகிய பாதாள உலகக் குண்டர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று கிடைத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொலை செய்யப்பட்ட லசந்த விக்கிரமசேகர கடந்த சில ஆண்டுகளாகவே மரண பயத்தில் இருந்தார் என்று தெரியவந்துள்ளது.

முன்னாள் இராணுவச் சிப்பாய் மூலம் பாதாள உலகக் கும்பலால் லசந்த சுட்டுப் படுகொலை | Lasantha Wickramasekara Death Cid Investigation

இந்த மரண பயத்தின் காரணமாக, அவர் ஒரு இரகசிய வாழ்க்கை வாழப் பழகியிருந்தார் எனவும், தனது வசிப்பிடத்தைக் கூட மாற்றியிருந்தார் எனவும் விசாரணை அதிகாரிகள் கூறுகின்றனர்.

லசந்தவுக்கு வந்த மிரட்டல்கள் காரணமாக அவர் சுமார் 15 தனிப்படை காவலர்களை வைத்திருந்தார் எனவும் தெரியவந்துள்ளது. இருப்பினும், கொலை நடந்த நேரத்தில் அந்தக் காவலர்களில் ஒருவர் கூட அவருக்கு அருகில் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விடயத்திலும் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிகம பிரதேச சபை தவிசாளரின் கொலை தொடர்பாக, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மேற்பார்வையிட்டுள்ளார். தென் மாகாணத்துக்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

வெலிகம பிரதேச சபை தலைவர் விவகாரம்: சந்தேகநபர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

வெலிகம பிரதேச சபை தலைவர் விவகாரம்: சந்தேகநபர் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US