வெலிகம பிரதேச சபைத் தலைவரின் மரணத்திற்கான காரணம் இதுதான்..உறுதியான தகவல்
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் மரணத்திற்கான காரணம், பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கியால் சுடப்பட்டதால் தலை மற்றும் மார்பின் உள் உறுப்புகளில் ஏற்பட்ட பலத்த காயங்கள் தான் மரணத்திற்கான காரணம் என்பதை மாத்தறை பொது மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூடு
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி 22ஆம் திகதி உயிரிழந்தார்.

இந்தசம்பவம் பல அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில், மாத்தறை பொது மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரியில் தலைமையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனையில் லசந்த விக்ரமசேகரவின் உடலில் இருந்து மொத்தம் ஆறு தோட்டாகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை
தலையில் இருந்து மூன்று மற்றும் மார்பில் இருந்து மூன்று என அகற்றி, வெலிகம தலைமையக காவல் ஆய்வாளர் மற்றும் பிற காவல் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார்.

உடல் எக்ஸ்ரே பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்ட பிறகு, தோட்டா உறைகள் எளிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதாக தடயவியல் மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஏற்பட்ட மரண காயங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, தலைவர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்க வேண்டும் என்று சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி ஊகித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.